Friday 17 July 2015

தேவதையின் பிறந்தநாள்!

தேவதையின் பிறந்தநாளை  கொண்டாட
என் தோட்டத்து மலர்களும் பூத்துக்குலுங்கின..!
அன்பே உன் பிறந்தநாளில் உன்னை வாழ்த்த
மழைத்துளிகளும் மண்ணை நனைத்தன..!
நீ நினைத்தவை எல்லாம் வெற்றி பெற
கோவில் மணிகளும் நீங்காமல் ஒலித்தன..!
நித்தமும் உன் உதட்டில் சிரிப்பு தவழ
பிரார்த்தனைகளும் குவிந்தன..!
பதினாறும் பெற்று நீவிர் பெருவாழ்வு வாழ
பெற்றோரும் மனமுருகி வேண்ட..
அந்த கடவுளும் கனிந்து ஆசி கூறுவான்,
பூவே நீ இந்த மண்ணுலகில் வளமுடன் வாழ..!

No comments:

Post a Comment