Monday 18 June 2018

நான் நினைப்பதை தான் நீங்களும் நினைக்கிறீர்களா?

கண்ணம்மா, நீ சேலை கட்டிக்கொண்டு வாழவேண்டிய பதுமை என்று இல்லை.. சேலையிலும் புரட்சிகள் பல இருந்து உள்ளன.. கஸ்தூரி பாய், அன்னை தெரசா போன்றோரும் சாதித்தனர்... 

நம்முடைய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் உடைகளா உடுத்திக்கொள்ள வசதியாக உள்ளது? 

கண் பறிக்கும் உடைகளை விட ஒரு நாள் சேலை அணிந்து சென்றாலும் தேவதையை போல் உன்னை நீயே உணர்வாய்...  

ஒரு சிகைக்காய் விளம்பரத்தில் கூட பெண் மட்டுமே.. ஏன் ஆண்கள் சிகைக்காய் பயன் படுத்துவது இல்லையா? பெண்களை போதை பொருளாக இன்னும் இந்த சமூகம் பார்க்கிறது.. அந்த சிலந்தி வலையில் சிக்கிக்கொள்ளதே.. 

உலக அழகியாக இந்தியா பெண்கள் தேர்ந்தெடுக்க பட்ட காரணம் இங்கு பலருக்கு தெரிந்திருக்க கூடும்.. "விளம்பரம்" இது மட்டுமே.. இந்தியா அழகு பெண்களை குறி வைத்து நடத்த பட்ட ஒரு விளையாட்டு.. இங்கே தான் ஜனத்தொகை  அதிகம் உள்ளது.. பெண்கள் அதிகம் உள்ளனர்.. இங்கே தான் தங்கள் "Face cream" விற்க முடியும் என்று தெரிந்து உலகமே அரங்கேற்றிய ஒரு நாடகம்.. 


ஒரு பயத்தம் பருப்பு போட்டு வராத அழகையா நாம் இந்த அமிலங்கள் போட்டு பெற்றோம்? உண்மையில் கண்ணாடி அருகில் நின்று நம் முகத்தையும் நம் தாய் முகத்தையும் வைத்து பார்த்தால் தெரிந்து விடும்..  

பெண்மை என்னும் இருளில் இருந்து விலகி உண்மை என்னும் ஒளியை தேடு..  இந்த சமூகத்தின் மாய வலையில் சிக்கிக்கொள்ளாதே, கண்ணம்மா!

No comments:

Post a Comment